|
ஏன் இந்தப்போராட்டம்?
நிர்வாகத்தில் காணப்படும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம்
தனியார் மயமாக்கலால் பாதிக்கப்படும் ஊழியர்களையும் அவர்களது
நலனையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையாகும். இந்த ஊழியர்களின்
பிரச்சனை அநேகருக்கு சாதாரண பிரச்சனைபோல் தோன்றலாம். இந்தப்
பிரச்சனையின் தாற்பரியம் எவ்வாறு இருப்பினும் அவர்களால்
வெளிக்கொண்டு வரப்பட்ட பிரச்சனைகளின் ஆழத்தினை ஆராய்வதே
இக்கட்டுரையின் நோக்கம்.
நிர்வாகத்தின் ஊழல்!
ஒரு நிர்வாகத்தில் காணப்படும் ஊழல் என்பது பலருக்கு சாதாரண
விடயமாக இருக்கலாம் ஏனெனில் இன்று ஊழல் என்பது இலங்கை அரச
ஆட்சியில் எல்லா இடங்களிலும் பரவலாக மலிந்து காணப்படுகின்றது
என்ற கருத்து நிலவுகின்றமையே ஆகும். ஆனாலும் 1995ற்கு முன்பு
இவ்வாறானதொரு பிரச்சனை யாழ் பல்கலைக்கழக ஊழியர்களால்
முன்வைக்கப்படவில்லை. அப்படியானால் அதற்கு பின்னர் ஏதாவது ஊழியர்
போராட்டங்கள் இடம்பெற்றதா? என்ற கேள்வி எழும். ஆம் பல
போராட்டங்கள் எழுந்தன அவை மிகச் சாதுரியமாக கையாளப்பட்டு
தற்காலிக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆகவே தற்போது
ஊழியர்களால் வெளிப்படுத்தப்படும் யாழ் பல்கலைக்கழகத்தின்
நிர்வாகச் சீர்கேடு என்பது இன்றைய அரசியல் நிலைமைகளில்
முக்கியமானதொன்றாகும்.
நிர்வாகம் சரியில்லை என்றால் நிர்வாகியின் மீது உள்ள பிரச்சனையே!
என்பது படித்தவர்கள் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். மேலும்
இக்கூற்றை விளங்கப்படுத்துவதாயின் தமிழ் மூதாட்டி ஒளவை சொன்னது
போல 'தலைவன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி" என்ற அனுபவமொழி நன்கு
தெளிவுபடுத்தும். 1995ம் ஆண்டிற்கு பின் யாழ்
பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்த, தலைமை வகிக்கின்ற
உபவேந்தர்கள் இருவரும் பின்கதவால் பதவியில் அமர்ந்தவர்களே!
தற்போது உள்ள துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற
வாக்கெடுப்பில் மூன்றாது இடத்தைப்பெற்றவர் என்பதும், அவர்
ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சர் ஒருவரின் சிபாரிசு
பெற்றுப் பதவியில் அமர்த்தப்பட்டவர் ஆவார். முன்னைய
துணைவேந்தரும் மேற்படி அமைச்சரின் சிபாரிசில் பதவிக்கு
அமர்த்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லோருக்கும் பதவியில் ஆசை இருப்பது சாதாரணம், இருப்பினும்
தகுதியுடையவருக்கு அப்பதவியை வழங்குவதன் மூலமே நிர்வாகத்தை
சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும் என்ற உண்மை புரியாதவரல்ல
அமைச்சர்!. ஆக, அப்பதவியை வழங்கியது என்பது திட்டமிட்ட செயல்.
பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சியால் முதன் முதலாக பொங்குதமிழ்
நிகழ்வு கொண்டாடப்பட்டு தமிழருக்கு இழைக்கப்டும் கொடுமைகள்
உலகிற்கு வெளிக்கொண்டு வரப்பட்டன. பல்கலைக்கழகம் விடுதலைப்
போராட்டத்திற்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்தது. ஆகவே
விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் கவனம்
பல்கலைக்கழத்தின் பக்கம் திரும்பியுள்ளமை
ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல.
அண்மைக்காலமாக சில வெளிநாட்டு சக்திகள் தமிழர் போராட்டத்தை
முற்றாக ஒழித்துக்கட்ட பல வழிகளிலும் முயற்சி செய்வது அனேகர்
அறிந்த விடயம். அவ்வாறானவர்கள் நேரடியாக எந்தக் காரியத்தையும்
செய்யமாட்டார்கள். தங்களை சிறந்த அறிவாளிகளாக எண்ணுவார்கள்.
ஏனெனில் சோவியத் யூனியனை (ரஷ்யா) சின்னாபின்னப்படுத்திய பின்பு
தங்களின் எட்டு வருட முயற்சியை புத்தகமாக வெளியிட்டவர்கள்.
தங்களின் நலனுக்காக ஒரு இடத்தில் ஒரு நியாயமும் இன்னொரு இடத்தில்
வேறு ஒரு நியாயமும் பேசுவார்கள். இவர்கள் நேரடியாகவே
தமிழீழத்தில் வந்து தங்களது வேலைகளைச் செய்ய அவர்களது
வெள்ளைத்தோல் இடமளிக்காது! அதனால் தான் காலத்திற்குக் காலம்
இலங்கையில் பல துரோகிகள் இவர்கள் வசம் பணிந்துபோனதை வரலாறு
குறித்து நிற்கிறது.
அதற்காக நம்மவர்களையே உபயோகப்படுத்துவது தவிர்க்க முடியாது.
அந்த வகையில் தங்களை அறியாமலோ அல்லது அறிந்தோ செயற்படுபவர்கள்
தான் எங்களுடைய படித்த கல்விமான்களில் சிலர். கல்விமான்களிடையே
காணப்படுகின்ற பலவீனங்களுக்கு தீனிபோடுவதன் மூலம் காரியங்கள்
நிறைவேற்றப்படுகின்றன. அதாவது உயர் பட்டங்களின் மீதுள்ள பற்று,
உயர் பதவிகளின் மீதுள்ள பற்று, உடல் இச்சைகளின் மீதுள்ள பற்று
இவற்றை நிறைவு செய்வதன் மூலம் தமிழர்களின் உயிர்நாதமாகிய கல்வியை
சிதைப்பதற்கு கல்விமான்களின் உதவி பெறப்படுகின்றது. எத்தனையே
ஆண்டுகளாக விலைகொடுத்து கட்டியெழுப்பபட்ட விடுதலை உணர்வை, இதுவரை
கண்ட வெற்றிகளை, சுயலாபங்களுக்காகவும், தனிப்பட்ட
குரோதங்களினாலும் இவர்கள் கூட இருந்து செய்கின்ற செயல்களால் சில
காலங்களுக்குள் தீர்வு காணப்பட முடியாத நோய்கள் போல (எயிட்ஸ்)
எமக்குள் இருந்து எம் இனத்தின் சுவடுகளை அழிக்கும்! வாழ்வை
நாசமாக்கும்.
சாதாரண வியாபாரி தனது அன்றாட உணவுத் தேவைக்காக புலிகளின்
முகாமைக்காட்டிக் கொடுத்த துரோகம், புலி உறுப்பினர்களை
காட்டிக்கொடுத்த துரோகம், படித்த கல்விமான்கள் செய்யும்
துரோகத்தோடு ஒத்துப்பார்க்கையில் மன்னிக்கக் கூடியதே! ஏனெனில்
அவர்கள் படிக்காத பாமரர்கள், சாதாரண விடயங்களில் உள்ள அரசியல்
நோக்கங்களை புரிந்து கொள்ள முடியாதவர்கள். படித்து பட்டம் பெற்ற
கல்விமான்களை தமிழர் சமூகம் அவ்வாறு எண்ணக்கூடாது! துரோகம்
செய்த பாமர மக்களையே தமிழ் சமூகம் மன்னித்தது கிடையாது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
கல்வியில் சிதைவை ஏற்படுத்துவது என்பது எந்த சாதாரண குடிமகனாலும்
ஏற்றுக்கொள்ளப்பட முடியாத துரோகம். இன்றைய உலக ஒட்டத்தில்
சிந்திக்கமுடியாதவர்கள் வாழ்ந்தால் அவர்கள் நாளுக்கு நாள்
ஏமாற்றப்படுவதும் சிலரால் உறிஞ்சப்படுவதும் தவிர்க்க முடியாதது.
அடிப்படையான, ஆரோக்கியமான கல்வியே ஒருவனைச் சிந்திக்கத்
து}ண்டுகின்றது. அவ்வாறான கல்வியை வழங்கும் நிறுவனத்தில்
ஏற்படுத்தப்படும் முறைகேடுகள், ஒழுக்கக் குறைவுகள் நிச்சயம்
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தில் குறைவை
ஏற்படுத்தும்!
இதற்கு சான்றாக பின்வரும் சம்பவம் விளங்குகின்றது.....
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழியர் போராட்டத்தைப்பற்றி
மாணவர்களிடையே கருத்துக் கேட்டபோது ஒரு பகுதி மாணவர்கள் கருத்து
தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் கூறிய விளக்கம் 'நாங்கள்
வீண் பிரச்சனைகளுக்கு தலைகொடுக்க விரும்பவில்லை, நிர்வாகத்தால்
நாங்கள் பழிவாங்கப்படுவதை உங்களால் தடுக்கமுடியாது! அந்தக்
கட்டிடத்தில் இறுதி வருட மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம்
போய்க்கேளுங்கள்" என்றார்கள்.
மற்றைய பகுதியினர்
'நாங்கள் எவற்றிலும் தலையிடுவது கிடையாது. நாங்கள் காலையில்
வந்தால் மாலையில் போய்விடுவோம், யாரும் என்னவாவது செய்யட்டும்
எங்களுடைய படிப்பைக் குழப்பாது விட்டால் போதும்.." என்றார்கள்.
இந்த இருமாணவ குழுக்களின் கருத்து பல்கலைக்கழக நிர்வாகத்தால்
எவ்வாறு மாணவர்கள் அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான
உதாரணமாகும்.
(சிந்தனைக்கு......
சீர்கெட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்படும் மாணவர்கள் சீராக
இருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு (நான்கு வருடம்
வாழுகின்ற சூழல் நிட்சயம் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வரும்)
அவ்வாறு வெளிவரும் மாணவர்கள் அநேகர் ஆசிரியர் பதவி பெற்று
சேவையாற்றுவது பொதுவானது. இது இவ்வாறு இருக்க எப்படி ஒரு
ஒழுங்கான சமுதாயத்தை இனிவரும் காலங்களில் உருவாக்க முடியும்?)
இதேவேளை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றும்
முக்கியமானது, ஊழியர்களை இடைநிறுத்துவது பற்றிய விளம்பரம்.
இதுவும் கிளர்ந்து எழுகின்ற மக்களை பயமுறுத்தி அடக்குவதற்கான
செயற்பாடுகளில் ஒன்று.

இந்த விளம்பரத்தில் ஒன்று கூர்ந்து கவனிக்கப்படல் வேண்டும்.
அதாவது குடாநாட்டில் ஐந்து தினசரிகள் வெளிவருகின்ற போதும் ஒரு
பத்திரிகையில் மட்டும் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ அறிக்கைகளை
விடுவது என்பது பல்கலைக்கழகம் பிரச்சனைகளை எந்தவகையில் ஜனநாயக
hPதியாக கையாளுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்! (அரச
பத்திரிகையில் வெளியிட்டிருக்கலாம் அல்லது எல்லா தனியார்
பத்திரிகையிலும் வெளியிட்டிருக்கலாம்) இதற்கு சரியான விளக்கம்
சொல்வார்களா?
ஊழியர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஊழல்களை மறைப்பதற்கும், தற்போது
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பல
உத்திகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்து.
(பாகம்01
பாகம்03) |