|
''டாக்டர் ஏன் கோபமா இருக்கார்?''
''ஒரு பேஷண்ட் அவர்கிட்ட 'டாக்டர் நான் ஆபரேஷனுக்கு அப்புறம்
சொர்க்கத்துக்கு போவேனா? நரகத்துக்கு போவேனா?'னு கேட்டாராம்''
-------------------------------------------------------------------------------
''நான் ஊருக்கு போகும்போது என் பழைய சட்டைகளை எல்லாம் பீரோவுல
வெச்சிட்டு போனேனே? பத்திரமா இருக்கா?''
''பாத்திரமா இருக்கு''
--------------------------------------------------------------------------------
''அந்த தியேட்டருக்கு ஃபேனே தேவையில்லை''
''ஏன். ஏ.ஸி. இருக்கறதாலயா?''
''ஏற்கெனவே காத்து வாங்கிட்டுதானே இருக்கு?''
- சி.பி.செந்தில்குமார்
--------------------------------------------------------------------------------
நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி: சைதாப்பேட்டையிலே டாக்டர்!
-ச. ரபிக்ராஜா
--------------------------------------------------------------------------------
தொண்டர் (1) : தலைவர் புதுசா ஏஜென்ஸி வியாபாரம்
ஆரம்பிச்சிருக்காரு போல இருக்கு.
தொண்டர் (2) : எப்படி சொல்றே?
தொண்டர் (1) : இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சி
எம்.பி.க்கள் நிலையான ஆட்சி அமைய ஆதரவு
தருவார்கள்; 'இந்தச் சலுகை ஸ்டாக் உள்ள வரை மட்டுமே'ன்னு
பேசியிருக்காரே!
--------------------------------------------------------------------------------
மகன்: ''என்னம்மா....மைசூர் பாகு அப்பாவுக்கு ஒண்ணு; எனக்கும்
ஒண்ணுதானா?''
அப்பா: ''இது விஷயத்திலே உங்கம்மாவுக்கு 'பாகு' பாடே கிடையாது!''
-என்.கே.கண்ணன்
--------------------------------------------------------------------------------
"பக்கத்து வீட்டுல ரொம்பப் பந்தா பண்ணிக்கிறாங்க..."
"எப்படிச் சொல்றே?"
"கால்குலேட்டர்ல பெருக்கறதுக்குக் கூட வேலைக்காரி
வைச்சிருக்காங்களே!"
- ஆ. சக்திவேலன்
--------------------------------------------------------------------------------
"எப்படி உங்க வயிற்றில் இவ்வளவு காயம் ஆச்சு?"
"பசி வயித்தைக் கிள்ளிடுச்சு டாக்டர்"
-எஸ். பொன்னுசாமி
--------------------------------------------------------------------------------
''பல் வலின்னு சொல்லிட்டு ஏண்டா கால்நடை டாக்டர்ட்ட பொயிட்டு
வர்ற?''
''எனக்கு 'சிங்கப்பல்ல' சொத்தையாச்சே''
-புத்தூர் முருகன்
--------------------------------------------------------------------------------
ஒருவர்: ''நீ எழுதின கதை பேப்பர்ல வந்திருக்கு. உனக்கு யார்
எழுதிக் கொடுத்தாங்க?''
மற்றவர்: ''அது இருக்கட்டும். நான் எழுதின கதை பேப்பர்ல
வந்திருக்குன்னு யார் உனக்குப் படிச்சி சொன்னாங்க?''
-சந்தியூர் ஏ.கோவிந்தன்
--------------------------------------------------------------------------------
''சீர்'' என்னென்ன வேணும்ன்னு, ஏற்கனவே ஒரு லிஸ்ட் கொடுத்தீங்க!
இப்போ, வேற 'லிஸ்ட்' கொடுக்கறீங்களே...!''
''இது 'சீர்'திருத்தக் கல்யாணமாச்சே..... அதான்!''
-கலை நண்பன்
--------------------------------------------------------------------------------
''உங்க ஊர்லே சமையலுக்கு ஆள் கிடைக்குமா''
''ஆளெல்லாம் கிடைக்காதுங்க! காய்கறிதான் கிடைக்கும்!
லவ்லிராஜா
--------------------------------------------------------------------------------
''அந்த சலூன்கடைக்காரர் ரொம்ப நல்ல டைப்!''
''எப்படி?''
''முடிவெட்டறப்ப தவறி காதை வெட்டிட்டா, முடிவெட்டினதுக்கு காசு
வாங்கமாட்டாரு!''
- தஞ்சை இரா.ஆதி
--------------------------------------------------------------------------------
''பையன்கிட்டே உனக்கு மூளை இருக்கா'ன்னு கேட்டது தப்பாப் போச்சு''
''ஏன்?''
''அவன் ஸ்கேன் எடுத்த 'ரிப்போர்ட்டை'க் கொண்டு காட்டுறான்!''
-பாளை பசும்பொன்
--------------------------------------------------------------------------------
''டாக்டர் மார்ச்சுவரிக்கு எப்படி போகணும்''
''இதோ.... இந்த ஆபரேஷன் தியேட்டர் வழியாக் கூட போகலாம்''
- விசன்
--------------------------------------------------------------------------------
அவன்: உங்க ''கடைக்குட்டி'' என்ன பண்றான்?
இவர்: ''குட்டிக்கடை'' ஒண்ணு வச்சிருக்கான்!
-புதுவண்டி ரவீந்திரன்
--------------------------------------------------------------------------------
சத்தம் போட்டு விற்பவர் யார்?
'கத்தி' வியாபாரம் செய்பவர்!
--------------------------------------------------------------------------------
கருமிகள் மகாநாடு நடத்த சிறந்த இடம் எது ?
'கஞ்சன்' ஜங்கா!
--------------------------------------------------------------------------------
கதை சொல்லும் மரம் எது?
'நாவல்' மரம்!
--------------------------------------------------------------------------------
புகையைக் கக்கும் பிராணி எது?
சாம்'பிராணி'!
--------------------------------------------------------------------------------
கப்பல் ஏன் ஆடுது?
அது எப்பவும் 'தண்ணி'யிலே இருக்கு!
--------------------------------------------------------------------------------
மரம் செடி கொடி இல்லாத சோலை எது?
காசோலை!
--------------------------------------------------------------------------------
வளராத மரம் எது தெரியுமா?
கைகாட்டி மரம்!
--------------------------------------------------------------------------------
அரசியல் வாதிக்கு பிடித்த வாரம் எது!
ஆரவாரம்!
--------------------------------------------------------------------------------
காசு இல்லாமல் போகும் தந்தி எது?
வதந்தி!
-பி.கே.சங்கர்
--------------------------------------------------------------------------------
''என்னடா உங்கப்பா, உனக்குச் சொத்திலே வெறும் ஆயிரம் ரூபா
மட்டும் எழுதி வச்சிருக்காரு?''
`'நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்டா!''
''சே... அந்த ஆயிரம் ரூபா கூட உன் பணம்தானா?''
டி. பன்னீர் செல்வம்
--------------------------------------------------------------------------------
தொண்டர்: நம்ம தலைவரு ஏது திடீர்னு அவர் பையனை மிலிட்டரிலே
சேர்த்துட்டாரு?
மற்றவர்: பையன் பேரிலே நிறைய பணம் போட்டதை அவன் மேஜரானாதான்
எடுக்க முடியும்னு பாங்கிலே
சொல்லிட்டாங்களாம்.
எஸ். எம்.சுந்தரம்
--------------------------------------------------------------------------------
''மாமியார் மருமகள் சண்டை போடறச்ச யாரோ ஒருத்தர் நடுவுல வந்து
சோப்பைக் காட்டறாரே ஏன்?''
''அந்தச் சண்டையை ஸ்பான்சர் பண்றதே ஒரு சோப்புக்
கம்பெனிகாரங்கதானாம்.''
மஞ்சுளா கிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------
''தாஜ்மஹாலைப் பார்கிறவங்க ஆச்சரியத்திலே மூக்கின் மேல் விரலை
வைப்பாங்க.''
''இதென்ன பிரமாதம். கூவத்தைப் பார்க்கிறவங்ககூட, மூக்கின் மேல்
விரலை வைக்கத்தான் செய்வாங்க.''
பொன். பிரபாகரன்
--------------------------------------------------------------------------------
''இந்த ஓட்டல் சர்வர் சுத்த `கர்நாடகமா` இருப்பான் போல....!
''ஏன் அப்படிச் சொல்றே...?''
''நானும் கால்மணி நேரமா தண்ணி குடிக்கக் கேட்கிறேன். காது
கேட்காத மாதிரி போறானே...!
-ஜே. காளிதாஸ்
--------------------------------------------------------------------------------
''அந்த உர விற்பனைக் கடையில், மொத்தமாக வாங்குபவர்களுக்குக்
கழிவு உண்டுன்னு சொன்னாங்களே?''
''மாட்டுச் சாணம், குப்பை கூளம் ஆகிய கழிவுகளைக் கொடுப்பாங்களாம்!''
-உடுமலை. பொன்னுசாமி
--------------------------------------------------------------------------------
''நடிகை ஜிகினாசிறீக்கு இருந்தாலும் இவ்வளவு ஆகாதுங்க...''
''ஏன்? என்னாச்சு?''
''தன்னோட பி.ஏ.வுக்கு பி.ஏ. தேவைன்னு விளம்பரம்
கொடுத்திருக்கிறாங்களே!''
-ஆ.சக்திவேலன்.
--------------------------------------------------------------------------------
''ஏன் கால் தாங்கி நொண்டி நடந்து வர்றீங்க...''
''வந்த வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்ததே பார்த்தீங்களா''
''பார்த்தேன்''
''நான் பார்க்கல அதான்''
-கே.பிரஷ்னேவ்
--------------------------------------------------------------------------------
காதலன்: ''கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னைத்தான் கல்யாணம்
பண்ணிக்குவேன்!''
காதலி: ''இல்லேன்னா?''
காதலன்: ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டவளோடயே காலம்
தள்ளிக்கிறேன்!''
--------------------------------------------------------------------------------
காதலி: ''நம்ம கல்யாணம் எப்போ டியர்?''
காதலன்: ''என்னோட கல்யாணம் அடுத்த வாரம். உன்னோட கல்யாணத்தை
பத்தி உங்கப்பன் கிட்ட கேளு!''
-கொங்கணாபுரம் வே.செந்தில்
--------------------------------------------------------------------------------
''அந்த நடிகைய ''டைட்டானிக்'' ஸ்டைல்ல எச்சில் துப்பச் சொன்னது
தப்பாப் போச்சு''
''ஏன்?''
''எச்சிலோட ''பல் செட்டு''ம் சேந்து விழுந்துருச்சு''
-மவ்லவி, சிலைமான் ரபீக்.
--------------------------------------------------------------------------------
''படுத்த ஒரு மணி நேரம் கழிச்சு, காதுல ரயில் ஓடுற சத்தம்
கேட்குது டாக்டர்!''
''நேற்றும் படுத்த ஒரு மணி நேரம் கழித்துத்தான் சத்தம் வந்ததா?''
''இல்ல டாக்டர்! நேத்து ரயில் இரண்டு மணி நேரம் லேட்டு''
- தரணிதரன்
--------------------------------------------------------------------------------
''அப்படி என்னய்யா...உன் பால் உசத்தி. இவ்வளவு விலை விற்கிறே?''
''பால்லே தண்ணிக்கு பதில் 'மினரல் வாட்டர்' இல்லே கலக்கிறேன்!''
-கோவீ.இராஜேந்திரன்
--------------------------------------------------------------------------------
"சொத்து பிரச்னையில் எனக்கும் என் அண்ணனுக்கும் தகராறு
வந்துடுச்சு"
"அப்புறம் சொத்து யாருக்கு கிடைச்சுது?"
"ரெண்டு பேரோட வக்கீல்களுக்கு"
- சோலோ.ப. செல்வராஜ்
--------------------------------------------------------------------------------
''புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கறவங்க ரொம்ப நல்ல மாதிரி!
நான் அங்கே போனவுடனேயே காப்பி கொடுத்தாங்க!''
''சரியாகப் போச்சு! அந்தக் காபிப் பொடியையும், பாலையும்,
சர்க்கரையையும் நம்ம வீட்டுலேர்ந்துதான் கடன் வாங்கிட்டுப்
போனாங்க!''
-என்.கே.பாலசுப்பிரமணியன்
--------------------------------------------------------------------------------
அவர்: ஹோட்டல் கடைக்காரர் கல்யாணத்துக்கு போனது தப்பா போச்சு.
இவர்: ஏன், என்னாச்சு?
அவர்: அதிகமா மொய் வைச்சவங்களுக்கு 'அன்லிமிடட்' சாப்பாடும்,
குறைவா மொய் வைச்சவங்களுக்கு அளவுச் சாப்பாடும் போடறாரு!
--------------------------------------------------------------------------------
ரமா: பால்கார ராமசாமி மேல மட்டும் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?
உமா: நான் 'அவர்பால்' ஈர்க்கப்பட்டு விட்டேன்!
-------------------------------------------------------------------------------
அவர்: புதுசா பூட்டுக் கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன்!
இவர்: அப்படியா...பெஸ்ட் ஆப் 'லாக்'!
-சேலம் கமலா
--------------------------------------------------------------------------------
''அது டாக்டரோட வீடு''
''சரி, அதுக்காக 'நோயுற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' னு வாசல்லே
எழுதி வைக்கணுமா?''
-டி.என்.பாலகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------
''எங்க மாப்பிள்ளை, தீபாவளிக்கு வந்துவிட்டுப் பொங்கலுக்குத்தான்
போவார்...''
''தேவலையே...எங்க மாப்பிள்ளை பொங்கலுக்கு வந்துவிட்டு தீபாவளி
முடிஞ்சுதான் கிளம்புவார்!''
-லெ.நா.சிவகுமார்.
--------------------------------------------------------------------------------
ஒருவன்: என் மாமனாரிடம் தீபாவளிக்கு கோட்டும் சூட்டும் கேட்டேன்.
மற்றவன்: வாங்கிக்கொடுத்தாரா....?
ஒருவன்: ஆமா...! ஒரு மாசத்திற்கு வாடகைக்கு வாங்கிக் கொடுத்தார்..!
--------------------------------------------------------------------------------
ஒருவன்: சித்த வைத்தியர்...ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இவரை
சித்தி வைத்தியர்...ன்னு சொல்றியே...!
மற்றவன்: எங்க சித்தி எப்பவும் இவரிடம் தான் வைத்தியம்
பார்ப்பார். அதனாலதான்.
--------------------------------------------------------------------------------
திருடன்: ரெண்டு தடவை உங்க வீட்ல திருடியிருக்கேனே...! ஏன்
போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணல...?
வீட்டுக்காரர்: இருக்கிறதயாவது காப்பாற்றிக் கொள்ளணுமின்னு தான்...!
-தேனி.எஸ்.மாரியப்பன்.
--------------------------------------------------------------------------------
"எம் பையனுக்கு மெடிக்கல் காலேஜில சீட் தரமாட்டேன்னு
சொல்லிட்டாங்க..."
"அப்புறம்?"
"உள்ளூர் பர்னிச்சர் கடையிலேயே வாங்கிட்டோம்!"
- ஆ. சக்திவேலன்
--------------------------------------------------------------------------------
"தம் அடிக்கும்போது கழுத்துல இருக்குற மைனர் செயினை ஏன்
கழட்டிட்டே?"
"செயின் ஸ்மோக்கர்-னு கெட்ட பேர் வந்துட கூடாது, பாரு"
- சி.பி. செந்தில்குமார்
நன்றி அம்பலம்.கொம் |